Wednesday, 20 August 2014

மாந்த்ரீகம் , மாந்த்ரீகத்தின் வரலாறு

மாந்த்ரீகத்தின் வரலாறு :


ரீக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.


மாந்த்ரீகத்தின்  நான் என்ன முறையாகும்


 உரு முறை ( WHITE MAGICK) : யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.

அஷ்ட கர்ம சித்திகள்


அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.

1.வசியம் :

நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.

2.மோகனம் :

நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .

3 .ஆக்ருஷனம் :

எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.

4 . ஸ்தம்பனம் :

தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.

5. பேதனம் :

கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.

6 . வித்வேஷனம் :

ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.

7 . உச்சாடனம் :

எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .

8 . மரணம் :

மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .



பூஜா விதி


அஷ்டதிக் பந்தனம் - திசைகட்டு
உடல் கட்டு மந்திரம்
மகா கணபதி தியானம்
குலதெய்வ தியானம்
அகத்தியர் தியானம்
உபாசனை தெய்வ ஆக்ருஷனம்
யந்திரம் வரையவும்
யந்திர சாப நிவர்த்தி
காரிய சித்தி மூலிகை மை வைக்கவும்
பிராண பிரதிஷ்டை மந்திரம்
மந்திர சாப நிவர்த்தி
மூலமந்திரம் உரு கொடுக்கவும்
அர்ச்சனை செய்யவும்

Popular Posts