Saturday, 19 October 2013

பைரவரை வழிபாடும் முறை :

பைரவரை வழிபாடும் முறை :


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 
சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில்வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 

Wednesday, 16 October 2013

மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் மனோவசிய மந்திரம்



மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இம்மந்திரம் உதவும்.
சகலவசியங்களுக்கும் மூலமாய் இருப்பது மனோவசியம் ஆகும்.
முதலில் மனதை எவன் வசியமாக்குகிறானோ அவனுக்கு சகல மந்திரங்களும் சித்தியாகும் சகல தேவதைகளும் வசமாகும்.

தன்னை ஆளக்கற்றுக்கொண்டவன் தரணியை ஆள்வான்.
தன் மனதை வசியம் செய்பவன் சகலத்தையும் வசியம் செய்வான்.
 
 


ஓம் மருமலர் வாசினி
சர்வஜன ரட்சிணி கௌரிபகவதி
மனோவசியம் குரு குரு சுவாகா.
 

 

இம்மந்திரத்தை 108 உரு செபித்துவர மனம் அடங்கி வசியமாகும்.
மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஓடாமல் மனம் ஓர் நிலைப்படும்.

Thursday, 3 October 2013

அனுமந்தர் வசிய மந்திரம்





ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 



இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும்.
                                             



செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும்
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.

Popular Posts